Tuesday, September 27, 2011



நெருங்கும் பொழுதெல்லாம் உயிர்ப்பிக்கிறாய் என்பதால்

பிரியும் பொழுதெல்லாம் உயிரை பறிப்பது நியாயமா...?


Thursday, September 22, 2011

கண்கொட்டாமல்,
நாள் முழுதும்
மழையை ரசிப்பது போல்
உன்னை பார்த்து கொண்டிருந்தாலும்
எபோழுதவது மட்டுமே தெறிக்கும் சாரல் போல்
என் மேல் உன் பார்வையை
சிதறி விட்டு  போகிறாய்
சிதறி போகிறேன் நான்
இதயம் ஒவ்வொரு துடிப்பிலும்
உதிரத்தில் ஆக்சிஜென் நிரப்பி அனுப்புமாம் .....
என் இதயமோ உன்னையே நிரப்பி அனுப்புகிறது...
மழை கூட உன் அழகை போல் தான்
முழுதாய் நனைந்தாலும்
ஓரமாய் நின்று ரசிபதின் சுகமே தனி!

அலைபாயும் உன் விழி

அரை நொடியேனும், என் மேல் விழுந்தால்தான்

அந்நாள் முழுமை பெரும்...

Tuesday, September 20, 2011


புதைக்குழியில் சிக்கி தவிக்கும் என்னை நோக்கி

நீளும் கைகளில் நான் கைபிடிக்கும்  கைகள் அனைத்தும் நான் கரை சேரும் முன்னே கை விடுவது ஏன்..?

Sunday, September 18, 2011

எனதருகில்,
வேறு யார் வந்தாலும்
உனக்கு புடிக்காது  என்பது அறிந்து தான்
என் நிழல் கூட 2 அடி தள்ளி
விழுகிறது....
மழை மண்ணை தேடி வருகிறது என்றுதான் எல்லோரும்  நினைத்து கொண்டு இருகிறார்கள்..
நான் மட்டுமே அறிவேன் அது உன்னை தேடி வருகிறது என்று
பாடல்கள் வெறும் இசையாக தான் இருந்தன நீ வரும் வரை....
வரிகளுக்கு அர்த்தம் பிறந்தது உன்னால்
கவிதைக்கு பொய் அழகு, இருக்கலாம்.
கவிதையை பற்றியே கவி எழுதும் போது பொய் எதற்கு?

என்னை நான்

முதலில் முழுதாய் பார்த்தது

கண்ணாடியில் அல்ல

உன் கண்ணில்

Wednesday, September 14, 2011

நேற்று இரவு
குறுஞ்செய்தியாக அணுப்பிய
கவிதை இன்று காலை
நிணைவுக்கு வர
மறுப்பது ஏன்...??
அடை மழை என்றாலும் குடை பிடித்ததில்லை அன்று,
இன்றோ சிறு தூரலிலும் நனைவதில்லை....
.
.
.
.
என்னுள் இருக்கும் உனக்கு மழை ஒவ்வாது என்பதால்...♥ ♥
காரணங்கள் 1000 கூறினாலும்,
காயங்களுக்கு அவை மருந்தாகாது....
என் வீட்டு முற்றத்தில் நிலவிருப்பதால்,
வேறு எவர் வீட்டிலும் இல்லை என்று பொருள் இல்லையே.....
தாய் என்றும் சேயை பிரிவதில்லை,
ஆயினும் தாய் மடி விட்டு இறங்கியபின்
நொடிக்கு நூறுமுறை
விழிகளாள் தன் தாயை தேடும்
குழந்தையைபோல் தேடி கொண்டிருக்கிறேன் உன்னை
இமைக்கும் கனம் உன்னை
கான இயலாமல் போய் விடுமே என்று தான்
கண்ணுக்குள்ளையே வைத்துள்ளேன் உன்னை
உடலில்
உறையும்
உயிரும்
உனதென
உதிரதால்
உயில் எழுதவா...???

 சிறகுகள் தந்து

சிறையில் அடைப்பது

நியாயமா?

கவலைகளை
கவிதைகளாக
மொழி பெயர்க தெரிந்தவர்கள்
அதிர்ஷ்டசாலிகள்...
நாட்காட்டியின் கிழிந்த பக்கங்களில்
சிதறி கிடக்கும் அவள் நினைவுகளை சேகரிக்கிறேன்...
ஒவ்வொரு முறையும் அவளே
ஒவ்வொரு முறையும் புதிதாய்..!
கைக்குள் அடங்குவதற்க்கு முன்
பறந்து செல்கிறாள் தூக்கங்களை தூக்கிக்கொண்டு.
என் இரவுகள் தேடல்களாய் கரைந்து கொண்டிருக்கையில்
அவள் வசபடும் முன்பே விடிந்து விடுகிறது என்றும்,
அவள் விலகிய நாளிள் இருந்து கிழிக்கபடாமல் நாட்காட்டி மட்டும்...